நாகர்கோவில், ஜூன்.15- குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி. இவர் மீது நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெண் மருத்துவரை தொடர்ந்து பெண் என்ஜினீயர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நேசமணி நகர் காவல் துறையினர் காசி மீது மற்றொரு வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் வட சேரியில் மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது இரண்டு வழக்குகளும், கன்னி யாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவானது மேலும் ஒரு கந்து வட்டி வழங்கும் அவர் மீது பதிவானது. இவர் மீது தொடர் புகார்கள் எழுந்ததால் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார். அவரை காவல் துறையினர் 2 முறை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது காசி தன்னால் ஏமாற்றப் பட்ட பெண்கள் பற்றியும் அதற்கு உதவிய நண்பர்கள் பற்றிய விவரங்க ளையும் காவல் துறையினரிடம் தெரி வித்தார்.
இதனை தொடர்ந்து காசியின் நண்பரான டைசன் ஜினோ என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மற்றொரு நண்பர் வெளிநாட்டில் உள்ளார். அவரை பிடிக்க விமான நிலையங்களில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காசி, தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பல பெண்களை ஏமாற்றி, படம் எடுத்து மிரட்டி பணம் பறித்திருக்கலாம். இதில் பல முக்கிய பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருக்க லாம். எனவே இந்த வழக்கு குறித்த உண்மைகளை வெளியே கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவும் காசியின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போ ராடி வருகின்றன. இந்நிலையில் காசி வழக்கு சிபிசி ஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் காசி வழக்கு தொடர்பான அனைத்து ஆவ ணங்களும் சிபிசிஐடி காவல் துறையி னரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் சிபிசிஐடி ஆய்வாளர் சாந்தி தலைமையிலான காவல் துறையினர் வழக்கு விசார ணையை தொடங்கினர். சிறையில் இருக்கும் காசி மற்றும் அவரது கூட்டா ளியான டைசன் ஜினோ ஆகிய இருவ ரையும் 10 நாள் காவலில் எடுத்து விசா ரணை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி காவல் துறையினர் நாகர்கோவில் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசார ணை திங்களன்று நாகர்கோவில் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியான், காசி மற்றும் அவரது கூட்டாளி டைசன் ஜினோ ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனு மதி வழங்கினார்.