குழித்துறை, ஆக.10- குமரி மாவட்டம் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரிகள் குழித்துறை அருகே வெட்டுமணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த வேனை மடக்கி பிடித்தனர். வேனை சோதனை யிட்டபோது சுமார் 2.5 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டு நர் தப்பி ஓடிவிட்டார். கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், வாகனம் வட்டாட்சி யர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.