districts

கேரளாவிற்கு கடத்த முயன்ற சுமார் 26000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்  

   களியக்காவிளை , நவ.14 தமிழக கேரள எல்லைப்பகுதி வழியாக  தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்ணெண்ணைய் கடத்துவது தொடர் நடவடிக்கை யாக இருந்து வருகிறது. .இந்த நிலையில் திங்களன்று களியக்காவிளை காவல்நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமரன்  தலைமையில் போலீசார்   களியக்காவிளை அருகே கல்லுக்கட்டி பகுதியில்  வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக லாரியும் அதன் பின்னால் டெம்போவும் வந்துக் கொண்டி ருந்தது. வாகனங்களை நிறுத்து மாறு சைகை காட்டினர். இருந்தும் அந்த டெம்போவும் லாரியும் நிறுத்தாமல் சென்று விட்டது.  தொடர்ந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று களியக்காவிளை அருகே திருத்தோபுரம் பகுதியில் வைத்து  மடக்கி பிடித்தனர்.ஓட்டுநர்கள் வாகனங்களை சாலை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.சந்தேகமடைந்த போலீசார் இரண்டு வாகனங்களையும்  சோதனை செய்து பார்த்த போது சுமார் 26000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.  இந்த ரேஷன் அரிசியை  கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.இதை தொடர்ந்து லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் வாகனத்தையும் அரிசி யையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்த னர்.  கடத்தல்  அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப  கிடங்கிலும் கடத்தல் வாகனங்கள் வட்டாட்சியர் அலுவல கத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தப்பியோடிய ஓட்டுநர்கள் யார் என்று  விசாரணை நடத்தி வருகின்றனர்.