tamilnadu

img

பிஎம் கேர்ஸ் நிதியில் நிவாரணம் கோரி நாகர்கோவிலில் மக்கள் சந்திப்பு இயக்கம்

நாகர்கோவில், ஆக.22- பி.எம். கேர்ஸ் நிதியை கொரோனா பாதித்த  மக்களுக்கு வழங்கவும், கேரளா போன்று 50 சதவீத மின் கட்டண சலுகை கேட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இடலாக்குடி பகுதியில் பொதுமக்க ளுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.  நிகழ்ச்சியை, கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.அகமது உசேன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, நகர செயலா ளர் கே.மோகன், நகரக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;