கருங்கல் அருகே கேரளாவிற்கு கடத்தப்படவிருந்த ரேசன் பறிமுதல்
நாகர்கோவில், செப்.29-குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பறக்கும்படை அமைக்கப் பட்டு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கருங்கல் அருகே மேல்குறும்பனை பகுதி யில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து காவல் துறையினர் மேல்குறும்பனை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சாக்கு மூடைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. வேனில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர் . மேலும் வேனுக்கு வழிகாட்டியாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. வேனில் இருந்த பாறசாலையை சேர்ந்த நிஷாந்த் (25), சவுத் (30) களியக்காவிளையை சேர்ந்த அஜ்மல்கான் (40) ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யபட்ட மூவரும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை அரசு உணவு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்ரோ கண்காட்சி நடக்கும் இடத்தை புகைப்படம் எடுத்த இளைஞர்கள் கைது
தூத்துக்குடி, செப்.29-தூத்துக்குடியில் வ.உ.சி. கல்லூரி முன்பு சந்தேகப்படும் வகையில் கைதான நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த இருவரிடம் உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற னர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் அடுத்த வாரம் இஸ்ரோ சார்பில் விண்வெளி எக்ஸ்போ கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற வுள்ளது. சனிக்கிழமை வஉசி கல்லூரி முன்பு சந்தேகப்படும் வகையில் இருவர் கல்லுரியை புகைப்படம் எடுத்துள்ள னர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்தபோது அவர் களிருவரும் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த ஆசிப் மகன் ரபிக் அகமது (30) மற்றும் அப்துல்ரசாக் மகன் ஜாபர்அலி (28) என்பது தெரியவந்துள்ளது. தூத்துக்குடி காவல்துறையினர் இவர்களிருவரிடம் விசாரித்து வரும் நிலையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்துள்ளனர். மேலும் இதில் ஒருவர் வெள்ளியன்றும் மற்றொருவர் மூன்று தினத்திற்கு முன்பும் வெளி நாட்டில் இருந்து வந்துள்ள னர். இவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்து ஏன் இங்கே புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும், அடுத்த வாரம் நடை பெறும் இஸ்ரோ நிகழ்ச்சியில் முக்கிய அறிவியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இது குறித்து சந்தேகம் அடைந்து சனியன்று இரவு 11 மணி அளவில் நெல்லை மாவட்ட எஸ்பி., உத்தரவின் பேரில் திருநெல்வேலியில் சம்பந்தப் பட்ட இருவரது விட்டிலும் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது ரபீக் வீட்டில் 10 செல்போன்கள், பாஸ்போர்ட், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி வந்துள்ள னர். தற்போதும் காவல்துறை விசாரணை தொடர்கிறது. இச் சம்பவத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.