tamilnadu

நாகர்கோவில், விருதுநகர் முக்கிய செய்திகள்

பனை உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகள்
நாகர்கோவில், செப்.5- வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் ஏற்பட்டு உள்ளதால் கடந்த சில தினங்களாக கடலில் சூறைக்காற்றும் ராட்சத அலை களும் ஏற்பட்டு வருகிறது. முட்டம், அழிக்கால் பகுதியில்  கடல் சீற்றம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு  கடல்நீர் ஊருக்குள் புகுந்தது . இந்த நிலையில் செவ்வா யன்று மாலை முதல் அழிக்கால், முட்டம், குளச்சல் பகுதி களில் பயங்கர கடல் சீற்றம் காணப்பட்டது. பனை உயரத்திற்கு  ராட்சத அலைகள் எழுந்ததால் மீனவர்கள் தங்கள்  மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு  எடுத்து சென்றனர். குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரண மாக புதனன்று பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை .  இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடலில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கூறியுள்ளதையடுத்து கடியப்பட்ட ணம், மணக்குடி, இனயம் , இரயுமன் துறை உள்பட மேற்கு  கடற்கரை பகுதியிலும் மீனவர்கள் பலர் கடலுக்கு செல்ல வில்லை.

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது 
விருதுநகர், செப். 5- விருதுநகர் மாவட்டம், எட்டநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (23). சூலக்கரையில் உள்ள  தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் மேற் பார்வையாள ராக பணியாற்றினார். அதே நிறுவனத்தில் 17 வயது சிறுமி  வேலை செய்துள்ளார். அந்தச் சிறுமியிடம் ஆசை வார்த்தை  கூறி பாலசுப்பிரமணியன், பாலியல் வல்லுறவில் ஈடு பட்டுள்ளார். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.