நாகர்கோவில், ஜூலை 27- விவசாயத்தை வேரறுக்கும் மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோத அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணை ப்பு குழு சார்பில் குமரி மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வைக்கல்லூர் தபால் நிலையம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டார செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி ஆகியோர் பேசினர். நாகர்கோவில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் என்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் ஆர்.ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி முத்து, மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் இராதா கிருஷ்ணன், திமுக நிர்வாகி ஹெலன் டேவிட்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அருமனை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முன் ஸ்ரீகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க வட்டாரச் செயலாளா் பி.சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரு மனை வட்டாரச் செயலாளா் சி.சசி குமார் உட்பட பலா் கலந்து கொண டனா். அண்டுகோடு கூட்டுறவு சங்கம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கூட்டுறவு சங்கத்தலைவா் அனூப் தலைமை தாங்கினார். தி.மு.க. சார்பில் ஷைனி காட்டன், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேல்புறம் வட்டாரச் செயலாளா் ஜெயராஜ், ராஜூ, ஹென்றி, கிறிஸ்டோபா் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் விவசாய கூட்டமைப்பின் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் இடைகாலில் நடைபெற்றது. போராட்டத்திற்கு தி.கணபதி தலைமை தாங்கினார். செல்லத்துரை, ஞானப்பிரகாசம், முருகையா, புஸ்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.