tamilnadu

குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி

நாகர்கோவில், செப்.29- கன்னியாகுமரி மாவட்ட விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர் கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு, கூடுதல் ஆட்சியர் ராகுல்நாத் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ரவி, நிர்வாகி ஆறு முகம் பிள்ளை, விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் மலை விளை பாசி, விவசாயி புலவர் செல் லப்பா, வின்ஸ் ஆன்றோ, வேளா ண்மை இணை இயக்குநர் (பொ) ஜாண் விஜி பிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் க.குணபாலன், வேளாண்மை துணை இயக்குநர் ம. முருகேசன், மண்டல இணை இயக்கு நர் பி.நடராஜ குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் எம்.அசோக் மேக் ரின், பொதுப்பணித்துறை பொறியா ளர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் முன்னோடி விவ சாயிகள் திரளாக கலந்து கொண்ட னர். கூட்டத்தில், பயிர் நிலை, நீர் நிலை, மழை விவரங்கள் பற்றி தெரிவிக்கப் பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட் டத்தில் பெறப்பட்ட 136 மனுக்களுக் கான பதில்கள் தெரிவிக்கப்பட்டு விவா திக்கப்பட்டது.  கூட்டத்தில் பேசிய விவசாயிகள் கூறுகையில், சூழலியல் பாதுகாப்பு மண்டலம் அமைவதற்கு முன்பே ஆளுர் பஞ்சாயத்தில் ஒருவர் வீட்டு மனை பிளானுக்கு அனுமதி கேட்ட போது, அந்த பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அருகே வருவதால் வீடு கட்ட அனுமதி வழங்க முடியாது என அதிகாரி கள் மறுத்து விட்டனர். சூழியல் அதிர்வு தாங்கு மண்டலம் குறித்து கிராமங்கள் வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்து வதற்கு முன்பே அந்த திட்டம் குமரி மாவட்டத்தில் அமல்படுத்த பட்டு விட்டதா? என கேள்வி எழுப்பினர். சூழி யல் அதிர்வு தாங்கு மண்டலம் வந்தால் மாவட்டத்தில் விவசாயம் அழியும் நிலை ஏற்படும். எனவே சூழியல் அதிர்வு தாங்கு மண்டலத்தை இந்த மாவட்டத்தில் கொண்டு வரக்கூடாது என இந்த கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண் டும் என கோரிக்கை விடுத்தனர். திற்பரப்பு இடதுகரைக் கால்வாய் ரூபாய் 18 லட்சம் மதிப்பில் தூர் வாரப் படுகிறது. இந்த கால்வாய் மட்டுமன்றி குடிமராமத்துப் பணி நடைபெறும் அனைத்து குளங்களிலும் கரையை பலப்படுத்தாமல், மணலை விற்பனை செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பகுளத்தில் ஆக் கிரமிப்பை அகற்ற வேண்டும் . பேச்சிப் பாறை அணை திறக்கப்பட்டு 3 மாதங்க ளாகியும் கடைவரம்புக்கு தண்ணீர் வர வில்லை. கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரும் வகையில் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் வர அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளியாற்றில் மருத்துவக் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். விவசாயிகளுக்கு பதிலளித்து கூடு தல் ஆட்சியர் ராகுல்நாத் பேசுகையில், சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் குறித்து ஏற்கெ னவே மாவட்ட ஆட்சி யர் தலைமையில் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது . அந்த கூட் டத்தில் கிராமங்கள்தோறும் கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட் டங்கள் முடிந்த பின்னர்தான் இறுதி முடிவு எடுக்கப்படும் . நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு தொடர்பாக 36 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 15 மனுக்க ளில் குறிப்பிட்ட இடங்களில் ஆக்கிர மிப்பு இல்லை என்று தெரிய வந்துள் ளது. மீதியுள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.  கூட்டத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்பு களை அகற்றுவது குறித்த விவசாயி களின் மனுக்களுக்கு அதிகாரிகள், இடங்களை ஆய்வு செய்யாமலே ஆய்வு செய்ததாக கூறினர். உடனே விவசாயிகள், வீடற்ற சாதாரண மக்க ளின் வீடுகளை ஆக்கிரமிப்புகள் என உடனே அகற்றும் அதிகாரிகள், பணம் படைத்தவர்கள் ஆக்கிரமித்து வைத்தி ருக்கும் நிலங்களை ஆய்வு செய்யக் கூட தயங்குகின்றனர் என குற்றம் சாட்டி னர். இதற்கு அதிகாரிகள் மழுப்பலான பதிலையே விவசாயிகளுக்கு அளித்த னர்.