tamilnadu

எஸ்ஐ சுந்தரலிங்கம் மீது  எஸ்பியிடம் சிபிஎம் புகார்

நாகர்கோவில், ஜூன் 18-  இளம் பெண்ணை ஏமாற்றி வன்பு ணர்வு செய்து கருக்கலைப்பில் ஈடுபட்ட பளுகல் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் ஆர்.செல்லசுவாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள மனு விபரம் வருமாறு:  கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சுந்தரலிங்கம் என்பவர் அக்காவல்நிலைய எல்கைக்குட்பட்ட மேக்கோடு பகுதியை சார்ந்த இளம் பெண் ஜோஸ்லின் என்பவரை திட்ட மிட்டு ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய் துள்ளார். பின்னர் சில வாரங்கள் கழிந்த நிலையில் கர்ப்பம் தரித்த அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அப்பெண்ணின் சம்மதம் இன்றி கருக் கலைப்பு செய்துள்ளார். இக்குற்ற சம்ப வத்தில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வா ளர் சுந்தரலிங்கம் மீது சட்டப்படி வழக் குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

;