நாகர்கோவில், ஜூன்.13- கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முட்டைகாடு கோயில் மூட்டுவிளையை சேர்ந்தவர் சந்திரபாபு. இவர் செம்ப ருத்திவிளை அருகே வழிக்கலம்பாடு பகுதியில் பால் விற்பனை ஏஜென்சி கடை நடத்தி வருகிறார். இவர் சனியன்று அதிகாலை 4.30மணிக்கு தன் கடையி லிருந்து பாலை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீடு வீடாக கொடுப்பதற்காக சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும்போது பூட்டியிருந்த கடையில் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்த போது மேஜையில் இருந்த ரூபாய் 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை யடுத்து சந்திரபாபு கொற்றிகோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் கொற்றிகோடு காவல்து றையினர் விசாரணை மேற்கொண்டு கொள்ளையனை தேடி வருகின்றனர். இதுபோல் தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் ஒரு வீட்டில் திருட சென்ற போது வீட்டில் ஒன்றும் கிடைக்காத விரக்தியில் வீட்டில் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டை மீன்குழம்புடன் தூக்கி சென்று அடுத்த வீட்டு மாடியில் வைத்து சாப்பிட்டு சென்றுள்ளார். மேலும், அருகில் உள்ள மற்றொரு வீட்டில் கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டிலிருந்தவர் விழித்ததால் கொள்ளை யர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ள சம்பவமும் நடைபெற்றது. இவ்வாறு தொடர்ச்சியாக தக்கலை பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.