நாகர்கோவில், ஜுன் 21- ஆரல்வாய்மொழி அருகே வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் பலியானார். தக்கலை அருகே முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்த வர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி கலையரசி. இவர்க ளது மகன் அஸ்விந்த் (5). ராமச்சந்திரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அஸ்விந்த் யு.கே.ஜி. படித்து வந்தார். இந்நி லையில்ஆரல்வாய்மொழி அருகே சீதப்பால் கிழக்கு தெரு வில் உள்ள தனது சகோதரி கவிதா வீட்டு நிகழ்ச்சிக்கு கலை யரசி சென்றார். வெள்ளியன்று இரவு நிகழ்ச்சி முடிவ டைந்ததும் கலையரசி தன்னுடைய குழந்தைகளுடன் அங்கேயே தங்கி விட்டார். சனியன்று காலை அஸ்விந்த் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் சுற்றுப்புற சுவர் திடீ ரென இடிந்து சிறுவன் அஸ்விந்த் மீது விழுந்தது. இதில் இடி பாடுகளில் சிக்கிய சிறுவன் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அஸ்வந்தை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழி யிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றினர். மருத்துவமனையில் கூராய்வு செய்து சிறுவனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.