tamilnadu

குமரி மாவட்டத்துக்கான ரூ.365 கோடி ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்க சிஐடியு வலியுறுத்தல்

நாகர்கோவில், ஜூன்.15- கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள 365 கோடி ரூபாயை கட்டுமான தொழிலாளர்களுக்கு அதிக  வேலை வாய்ப்பை உரு வாக்கும் திட்டங்களில் செலவு செய்திடவும் மற்றும்  பேக்கேஜ் முறையை கை விட்டு பேரூராட்சிகள் மூல மாக ஒப்பந்தம் ஏற்படுத்தி பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிர சாந்த் வடநேரேவிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கோ விட் 19 தொற்று தடுப்பு  ஊர டங்கு மற்றும் கோவிட் 19  நோய்த்தொற்று காரண மாக கன்னியாகுமரி மாவ ட்டத்தில் கடும் பொரு ளாதார நெருக்கடி ஏற்பட்டு  மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற னர். குறிப்பாக கட்டுமான தொ ழிலாளர்கள்  தொடர்ச்சியாக கடந்த 80 நாட்களுக்கும் மே லாக வேலையின்றி தவித்து  வருகிறார்கள்.

குமரி மாவட்ட கட்டுமான தொழி லாளர்களில் பெரும்ப குதியினர் வெளியூரில் தங்கி வேலைபார்ப்பவர்கள். தற்போது கோவிட் 19 ஊர டங்கு காரணமாக வெளி யூர் வேலைக்கும் செல்ல முடியாமல் உள்ளூரிலும் வேலையில்லாமல் முடங்கி போயுள்ளனர். இதனால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு குடும்பம்  நடத்துவதற்கு வாய்ப்பி ல்லாத அளவிற்கு தள்ள ப்பட்டுள்ளனர்.  வேறு எந்த வேலையும் இல்லாததால் 100 நாள் வேலைத்திட்டத்தில் இவ ர்கள் தங்களை பதிவு செய்யும் நிலைக்கு தள்ள ப்பட்டுள்ளனர். இந்நி லையில் கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அர சால் ரூபாய் 365 கோடி ஒது க்கீடு செய்யப்பட்டதாக செய்தி வெளிவந்தது. இத னால் ஏராளமான உள்ளூர் கட்டுமான தொழி லாளர்களுக்கு  வேலை கிடைக்கும் என்றும் கூறப் பட்டது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

ஆனால் இந்த 365கோடி ரூபாயும்  பேரூராட்சி பகுதிகளில்  பெரிய சாலைபணிக ளுக்காக செலவு செய்யப் படுவதாகவும், மாவட்ட அள வில் பேக்கேஜ் முறையில்  ஒப்பந்தம் போடப்படுவ தாகவும் கூறப்படுகிறது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அரசு ஒதுக் கீடு செய்துள்ள 365 கோடி ரூபாயை கட்டுமான தொழி லாளர்களுக்கு அதிக வேலை  வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களில் செலவு செய்தி டவும் மற்றும் பேக்கேஜ் முறையை கைவிட்டு பேரூ ராட்சிகள் மூலமாக ஒப்பந் ்தம் ஏற்படுத்தி பணிகள் மேற்கொள்ளவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை, சிஐடியு மாவட்ட செயலாளர் கே. தங்க மோகன், தலைவர்  பி. சிங்காரன் உள்ளிட்ட நிர்வா கிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.