tamilnadu

img

சிதம்பரம் நகராட்சியில் ரூ.10 லட்சம் முறைகேடாக வழங்கப்பட்டதா?

சிதம்பரம், ஜூலை 23- சிதம்பரம் நகராட்சியில் ஒப்பந்ததார ருக்கு வைப்புத்தொகை ரூ. 10 லட்சம் கூடுத லாக வழங்கியதற்கு சம்பந்தமில்லாத  கடைநிலை ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளதை கன்டித்து திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சிதம்பரம் நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்ததாரர் சண்முகம் என்பவருக்கு ரூ. 10 லட்சத்திற்கு பதில் கூடுதலாக  ரூ.10 லட்சம் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இந்த விவரம் சமீபத்தில் நடத்திய கணக்குத் தனிக்கை ஆய்வின் போது  தெரிய வந்தது. இதற்கு அப்போது நகராட்சியில் தொழில்  வரி எழுத்தராக இருந்த அசோக்என்பவரை பணிநீக்கம் செய்துள்ளனர்.இதனையறிந்த முன்னாள் திமுக  நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ்  விஜயராகவன், அப்பு சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன், கே. வெங்கடேசன், பன்னீர், சி.கே.ராஜன் மற்றும் திமுகவினர் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் இதுகுறித்து சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷாவிடம்  பணிநீக்க நட வடிக்கையை திரும்ப பெறவேண்டும் என்று முறையிட்டனர். அவர் உயர் அதிகாரி களிடம் கலந்து பேசி இதுகுறித்து முடிவு  எடுப்ப தாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் கூறுகை யில், பணிச்சுமையின் காரணமாக அசோக் என்பவரின் உயர் அதிகாரி இவருக்கு வைப்புத் தொகை கொடுக்கலாம் என்றும்,  அதற்கு ஒரு கடிதத்தை தயார் செய்யுங்கள்  என்றும் கூறியுள்ளார். அதனடிப்படையில் கடி தத்தை மட்டுமே எழுதியுள்ளார். அதில் கையெப்பம் கூட போடவில்லை.இந்நிலை யில் அவர் கடிதம் எழுதி கொடுத்தார் என்ற  காரணத்திற்காக பணிநீக்கம் செய்துள்ளது தவறானது. இதுகுறித்து ஆணையரிடம் முறையிட்டுள்ளோம். சரியான நடவடிக்கை இல்லையென்றால் ஆணையரை முற்று யிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.