கடலூர், ஆக. 23- சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகளுக்கு ரூ.30,000 வரை பணம் வசூலித்த முன்னாள் கவுன்சிலர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் டி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: 2004ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 2015ஆம் ஆண்டு கடலூர் முதுநகர் பணங் காட்டு காலனியில் 302 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு 2017ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் பயனாளிகளிடம் ரூ 30,000 வரை பணம் பெற்றுக் கொண்டு வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. பணம் கொடுக்காதவர்களின் வீடுகளை முன்னாள் அதிமுக கவுன்சிலர் வி.கந்தன் பூட்டு போட்டு பூட்டி விட்டதாகக் முதுநகரை சேர்ந்த சக்திவேல் என்பவர் கடந்த 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்துள்ளார்.
மேலும், முன்னாள் கவுன்சிலர் கந்தன் மீது கடந்த காலங்களில் பலவிதமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் சாதாரண ஏழை எளிய மக்களிடம் மிரட்டி பணம் வசூல் செய்வது, பணம் கொடுக்காதவர்கள் வீட்டை பூட்டுவது போன்ற இச்செயல் ஏற்புடைய தல்ல. பட்டப்பகலில் நடந்த இதுபோன்ற நட வடிக்கை சட்டம் ஒழுங்கை கேள்விக்குறி யாக மாற்றியுள்ளது. குடிசை மாற்று வாரிய திட்டத்தில் வீடு ஒதுக்குவதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள், முறை கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை யும் மாவட்ட நிர்வாகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலை வருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.