கடலூர், ஆக. 31- கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் அடைக்கப்பட்ட பாதையை திறக்க வேண்டுமென டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார். மாவட்டத் தலைநகரான கடலூ ருக்கான ரயில் நிலையமாக திருப்பா திரிபுலியூர் ரயில் நிலையம் செயல் பட்டு வருகிறது. கடந்த சில மாதங்க ளுக்கு முன்பாக இந்த ரயில் நிலை யத்தின் ஒரு பகுதி நுழைவு வாயிலை வாகனங்கள் செல்ல முடியாத அள விற்கு ரயில்வே நிர்வாகம் அடைந் தது. இதனால், அந்த பாதையை பயன்படுத்தி வந்த பான்பரி சந்தை வியாபாரிகள், நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வந்த பொது மக்கள், மார்க்கெட் காலனி பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடலூர் வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், ரயில்வே நிர்வாகத்தால் அடைக்கப்பட்ட பாதையையும், பான்பரி மார்கெட்டையும் பார்வை யிட்டார். தொடர்ந்து, மற்றொரு பகுதி யில் பாதிக்கப்பட்ட குப்பன்குளம் பகுதியையும் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களி டம் கூறுகையில், திருப்பாதிரிபுலியூர் பகுதியில் ரயில்வே நிர்வாகத்தால் அடைக்கப்பட்ட பாதையை பொது மக்கள், வியாபாரிகள் சுமார் 100 ஆண்டுகளாக பயன்படுத்தி வரு கின்றனர். இப்பாதையை திடீரென ரயில்வே நிர்வாகம் அடைத்ததால் வணிகர்கள், பொதுமக்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். பொருளாதார இழப்பினையும் சந்தித்துள்ளனர். நக ராட்சி மருத்துவணைக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் இந்த பாதையை திறந்து விட வேண்டும். அதேபோல் குப்பன்குளம் மக்கள் ரயில் நிலையத்தை எளிதில் கடக்கும் வகையில் அவர்களுக்குத் தேவை யான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் மற்றும் உயர் அலுவலர் களை சந்தித்து பேசுவேன் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நகரச் செயலாளர் ஆர்.அமர் நாத், நிர்வாகிகள் கே.ஸ்டாலின், என். பாலகிருஷ்ணன், டி.எஸ்.தமிழ்மணி, ஆனந்த், பழனி, பான்பரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.கே.பக்கிரான், செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். குப்பன்குளம் பகுதி மக்களும், பான்பரிமார்கெட் வியாபரிகளும் டி.கே.ரங்கராஜனிடம் மனு அளித்தனர். நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் டி.கே.ரங்கராஜனிடம் அளித்த கோரிக்கை மனுவில், திருப்பாதிரி புலியூர் ரயில் நிலையத்தின் பெயரை கடலூர் திருப்பாதிரிபுலியூர் என்று மாற்ற வேண்டும். இந்த ரயில் நிலை யம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும். திருச்செந் தூர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டிருந்தது.