tamilnadu

img

தலைமையாசிரியரை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், செப். 4- கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் நகராட்சியின் சார்பில்  சம்பந்தக்கார தெருவில் நக ராட்சி பெண்கள் உயர் நிலைப் பள்ளி உள்ளது. இதில் 6ஆம் வகுப்பு முதல்  10ஆம் வகுப்பு வரை உள் ளது. இந்த பள்ளியில் 100  மாணவிகள் பயில்கின்றனர்.  பள்ளியின் தலைமையாரிசி யராக  எழிலரசி என்பவர் பணி யாற்றி வருகிறார்.  இந்நிலையில் தலைமை  ஆசிரியர் ஆபாசமாக திட்டுவ தாகக் கூறி  பெற்றோர்களு டன் வந்த மாணவிகள் வகுப்  பறைக்கு செல்லாமல் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் நகர காவல் துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகள் தலைமை ஆசிரியர் ஆபாச மாக திட்டுவதாகவும், கழி வறையை சுத்தம் செய்ய கூறுவதாகவும், அவரை பணி யிட மாற்றம் செய்தால் மட்டுமே வகுப்புக்கு செல் வோம் என தெரிவித்தனர். காவல் துறையினர் பள்ளி தலைமை ஆசிரியரை பணி யிட மாற்றம் செய்ய நடவ டிக்கை எடுக்கப்படும் என்று  உறுதியளித்தனர். இதனை யடுத்து மாணவிகள் போராட்  டத்தை கைவிட்டு வகுப் பறைக்குச் சென்றனர்.