சிதம்பரம், ஜூலை 11- சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் அறி வுகுமார் (58). இவர் சிதம்ப ரம் ரயில்வே மேம்பாலம் அருகே பணி நிமித்த மாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி கீழே விழுந்த தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு சிகிச்சைக் காக அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் துறையி னர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.