tamilnadu

img

பெண்களுக்கு தற்காற்பு பயிற்சி

சிதம்பரம், பிப். 29- அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் துறை மற்றும் இளையோர் செஞ் சிலுவை சங்கம் சார்பில் மாணவிகளுக்கான தற்காப்பு பயிற்சி நடைபெற்றது. வேளாண் துறை முதல்வர் மணிவண்ணன் தலைமை தாங்கி பேசுகையில், “பெண்கள் அடிப்படை யான தற்காப்பு யுத்திகளை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்” என்றார். வேளாண்துறை பேராசிரியர் விஜயப் பிரியா, “சமூக விரோதிகளிடம் இருந்து மாணவிகள் தங்களை எவ்வாறு பாது காத்துக் கொள்ள வேண்டும்” என்பதை விளக்கமாக கூறினார். இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சிதம்ப ரம் கிளைச் செயலாளர் நடராஜன் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சிறப்புரை யாற்றினார். இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஐயப்பராஜா வரவேற்றார்.  இந்நிகழ்வில் அகில இந்திய டேக்வாண்டோ வாரியத்தின் தமிழ்நாடு கிளை  இணைச் செயலாளரும் பயிற்சியாளருமான அசோக்குமார் கலந்து கொண்டு மாணவி களுக்கு தற்காப்பு கலை யுக்திகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தார்.  இதில் வேளாண் துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டு தற்காப்பு கலைகலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அறிந்தனர்.  இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்த திட்ட அலுவலர் சிவராமன் நன்றி கூறினார்.