கடலூர், டிச.17- தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் உரிமை தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் டி.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் வி.கல்யாணசுந்தரம் வர வேற்றார். அகில இந்திய ஐஓபி ஓய்வூதியர் சங்கத் தின் துணை பொதுச் செயலாளர் எம்.மருத வாணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எல்.ஹரி கிருஷ்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் எம்.முத்துக்குமாரசாமி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலப் பொரு ளாளர் என்.ஜெயச்சந்திரன், போக்குவரத்து சங்க ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் ஜி.ராமச்சந்திரன், பொதுப்பணித் துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்பழகன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். கூட்டமைப்பின் பொருளா ளர் குழந்தைவேலு நன்றி கூறினார்.