tamilnadu

img

கவுன்சிலர் பதவிக்கு சிபிஎம் வாக்கு சேகரிப்பு

கடலூர் மாவட்ட ஊராட்சி 17 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பி.சோமுவுக்கு ஆதரவு கேட்டும், விருத்தாசலம் வட்டம் நல்லூர் ஒன்றியம் நகர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும்  ஜி.வேல்முருகனுக்கு ஆதரவு கேட்டும் செயல்வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன், வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன், வட்டக்குழு உறுப்பினர்கள் கே.எம்.குமரகுரு, ஏ.சாமிதுரை, ஆர்.கலைச்செல்வன், வாலிபர் சங்க வட்டத் தலைவர் பரமசிவம், மாணவர் சங்க  தலைவர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
**********************

விருத்தாசலம் வட்டம், நல்லூர் ஒன்றியம் 15 ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.காமராஜ் ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்பு  நடைபெற்றது. இதில் சிபிம் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர், என்.எஸ்.அசோகன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.முத்துலெட்சுமி, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.கலைச்செல்வன், வட்டக்குழு உறுப்பினர்கள் பன்னீர், மாணிக்கவேல், ராஜேந்திரன், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***************

கடலூர் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கவிதா பஞ்சாட்சரம்  காரணப்பட்டு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

****************

மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி சார்பில்  ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்  வேட்பாளர் ச.விக்ரமன் திண்டிவனம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.