tamilnadu

img

பரங்கிப்பேட்டையில் கிரிமி நாசினி தெளிப்பு

சிதம்பரம், மார்ச் 21- கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பேரூ ராட்சிக்கு உட்பட்ட பேருந்துநிலையம், கிளை சிறை, நீதிமன்றம், மார்கெட், பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பேரூ ராட்சி செயல் அலுவலர் சீனிவசன், சுகாதார ஆய்வா ளர் ஜோதி உள்ளிட்ட பேரூராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.   பேருந்து நிலையத்தின் சுவரில் பொதுமக்கள் கை கழுவுவதற்காக வாஷ்பேசன் அமைத்து, கொரானா குறித்த துண்டு பிரசுரத்தை வழங்கினார்கள்.  மேலும் பரங்கிப்பேட்டை பேரூந்து நிலையத்திற்கு வரும் அனைத்து பேரூந்துகளிலும் கிரிமி நாசினி தெளிப்பட்டு பேரூந்திலுள்ள பயணிகளி டம் கை கழுவுவதால் கோரானாவை தடுக்கலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அதேபோல் பரங்கிப் பேட்டை சமூக ஆர்வலர்கள் அமைப்பு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே பொதுமக்கள் கூடும் பகுதியில் கொரானா தடுக்கும் வகையில் பேப்பர், கைகுட்டை,  கிருமி நாசி னியை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இதில் பரங்கிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்த், அரசு மருத்துவர் சுமதி, பொது சுகாதர ஆய்வாளர் ரிச்சர்ட்எட்வின், பரங்கிப்பேட்டை சமூக ஆர்வலர்கள் முகமது ஹலிபா, அப்துல்பாசித், ஜாவித், ரியாஜ் உள்ளிட்ட வர்கள் கலந்துகொண்டனர்.