tamilnadu

நடுக்கடலில் மாயமான மீனவரின் உடல் மீட்பு

கடலூர், ஆக. 4- கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் படகிலிருந்து தவறி விழுந்து மாயமானவரின் உடல் செவ்வாயன்று மீட்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சூசைராஜ் (40). இவர் கடலூர்  மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கடலூர் தேனாம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களான ஆண்டனி தினேஷ் உள்ளிட்ட 7 பேருடன் ஒரு படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். அவர்கள் கடலுக்குள் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடு மாறிய சூசைராஜ்  கடலில் தவறி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரைத் தேடினர். ஆனால் அவர் நீரில் மூழ்கி மாயமானார். இதுகுறித்து காவல் துறையினர் மற்றும் மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். புதுச்சேரி மற்றும் தமிழக கடலோர காவல்படை யினர் சூசைராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் தேவ னாம்பட்டினம் மீனவர்களும் 4 படகுகள் மூலம் அவரை தேடினர். இந்நிலை யில் செவ்வாயன்று அவரை நடுக்கடலில் சடலமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.