tamilnadu

img

என்எல்சி வெடிவிபத்து எதிரொலி...  நெய்வேலியில் நாளை கடையடைப்பு...

கடலூர் 
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல்மின் நிலையத்தில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளர்கள் பலியாகினர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களுக்கு ரூ 3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும், என்எல்சி  வெடிவிபத்து விவகாரத்தில் மத்திய அரசு நிவாரணம் வழங்குமாறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கோரிக்கை விடுத்துள்ளார். 
இந்நிலையில், வெடிவிபத்தில் இரங்கல் தெரிவிக்கும் விதமாக நாளை நெய்வேலியில் கடையடைப்பு நடைபெறவுள்ளது எனவும், மருந்து கடைகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.    

;