சிதம்பரம், ஜூன் 17- சிதம்பரம் நகராட்சி காரிய பெருமாள் கோவில் தெரு, சுப்பிரமணியன் தெரு உள் ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர்குழாயில் முடைநாற்றமெடுக்கும் சாக்கடை கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் பாதள சாக்கடை பணிகள் நடை பெற்று வருவதால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பத்து முறைக்கு மேல் காரியபெருமாள் கோவில் தெரு சாலையில் மீண்டும் மீண்டும் பள்ளம் தோண்டப்பட்டது. தோண்டிய பள்ளத்தை அலட்சியமாக மூடியதால் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து வருவதை தடுக்க உடனடி யாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், குடிநீரே வராத இந்த காலக் கட்டத்தில் கூட குடிநீர் வரி வசூலிக்கிறார்கள் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.