tamilnadu

img

நாட்டிய நிகழ்ச்சிக்கு அடிப்படை வசதிகள் இல்லையா? சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் விளக்கம்

சிதம்பரம்,மே 7-சிதம்பரம் நடராஜர் கோயிலில் 6 வயது முதல் 60 வயதுடைய 2,800 பேர் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடினர். இதற்காக, தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 90 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் வருகை தந்தனர். இந்த பரதநாட்டிய நிகழ்ச்சிக்காகஒவ்வொருவரிடமும் ரூ. 2000 வரை வசூல் செய்துள்ளனர்.ஆனால், தங்களுக்கு போதிய வசதிகளைச் செய்து கொடுக்க வில்லையென்று சென்னை, ஓசூர் பகுதிகளிலிருந்து வந்த நாட்டியப் பள்ளி மாணவிகளும் ஆசிரியர்களும் கூறிய புகார் சமூக வலைதளங் களில் வைரலானது. இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் கோவில் தீட்சிதருமான அய்யப்பனிடம் கேட்டபோது,“ இந்த நாட்டிய நிகழ்ச்சி 40 நிமிடம் தான் நடந்தது. இதில் கலந்துகொண்டவர்களுக்கு தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தோம். ஆனால், அதனை அவர்கள் தங்கியிருந்த மண்டபத்திலே வைத்துவிட்டு கோவிலுக்கு உள்ளே வந்துவிட்டார்கள். பின்னர் கோயிலுக்கு வந்து தண்ணீர் கேட்டால் என்ன செய்வது? இது யாருடைய தவறு? கோயிலின் உள்ளே கழிவறை வசதிகள் செய்து கொடுக்க முடியாது. அப்படியே அவசரம் என்றால் கோயிலுக்கு வெளியே உள்ள கழிப்பறைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். அவர்கள் கொடுத்த பணத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்துவிட்டோம்” என்றார்.

மூடர்கள்

இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறும் ருத்ராபிஷேகத்தில் திரைப்பட பாடகர் ஜேசுதாசுதாஸ் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் 12 ஆம் தேதியே வருகிறார். அவர் சிதம்பரம் கோயிலுக்கு வருவதை இந்து 

அமைப்புகள் எதிர்ப்பு தவறானது. சிதம்பரம் கோயில் பேதமற்றது. இங்கு யார் வேண்டுமானலும் வந்து சாமியைத் தரிசிக்கலாம். இதுகுறித்து எதிர்க் கருத்து கூறுபவர்கள் மூடர்கள் என்றும் அவர் கூறினார்.

;