கடலூர்,ஜூன் 6-கடலூர், நாகை மாவட்டத்தில் விவசாயத்தை அழிக்கும், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்திடும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து குடியிருப் போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் டி.புருஷோத்தமன், ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாயவேல், முனுசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஆர்.மனோகரன் வரவேற்றார். பொதுச் செயலாளர் எம்.மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டமைப்பின் நிர்வாகிகள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், காசிநாதன், நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கே.பி.சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.