tamilnadu

img

கிராமங்களில் நிலவும் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் பகுதி கிராமங்களில் நிலவும் மின் வெட்டை கண்டித்தும், மழைக் காலங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின்வாரியம் அலுவலகம் முன்பு கட்சியின் ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன், விவசாயிகள் சங்க பொருளாளர் செல்லையா, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன் மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.