கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.138 கோடி நிலுவை தொகையை வழங்கக் கோரியும், நடப்பாண்டுக்கான கரும்புக்கு ஊக்க தொகை டன்னுக்கு ரூ.137.50 வழங்கக் கோரியும் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் இஐடி சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், நிர்வாகிகள் தென்னரசு, லோகநாதன், மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.