கடலூர்,அக்டோபர்.19- மங்கலம் பேட்டையில் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் மாத்தூர் பகுதியில் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் பெயரைச் சேர்க்காமல் இருக்க 1.5 லட்சம் வாங்கிய மங்கலம் பேட்டை காவல் ஆய்வாளர் சந்திரசேகரனை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி திஷாமிட்டல் நடவடிக்கை எடுத்துள்ளார்.