tamilnadu

img

மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி சிபிஎம் மனு

விருத்தாசலம் வட்டம், வடக்கு சேப்ளநத்தம் பகுதியில் தலித் மக்கள் 70 வருடமாக குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. இதில் வட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.சந்திரசேகரன், வீ.சிவஞானம், கே.அன்புச்செல்வி, ஆர்.கலைச்செல்வன், கிளைச் செயலாளர் எஸ்.கனகராஜ்  ஆகியோர் உடனுள்ளனர்.