tamilnadu

img

தோழர் வி.நடராஜன் படத்திறப்பு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு

சிதம்பரம், ஜூலை 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்ப ரம் நகர முன்னாள் செயலாளர் தோழர் வி.நட ராஜன் உருவப்படத்தை புதனன்று (ஜூலை 1) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். தோழர வி.நடராஜன் கடந்த 7ஆம் தேதி  அகால மரணம் அடைந்தார். அவரது உருவப்  படத்திறப்பு நிகழ்வு நகரச் செயலாளர் ராஜா  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய கே. பாலகிருஷ்ணன், நடராஜனின்  தந்தை எஸ்.வேங்கடரத்தினம் பிராமண சமூ கத்தை சேர்ந்தவர். இருப்பினும், சாதிய பாகு பாடு இல்லாமல் கடைசி வரை ஒரு கம்யூ னிஸ்டாக வாழ்ந்து மறைந்தார். அவரைப் போலவே நடராஜனும் இருந்தார் என்றார். தோழர் நடராஜன், இறுதி வரை கம்யூ னிஸ்ட் கொள்கைகளையும் நோக்கங்களை யும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். பல ஆண்டுகளாக பட்டை தீட்டிய வைரம் திடீர்  என கை நழுவி போனது போல் அவரது இறப்பு அமைந்துவிட்டது. இது கட்சிக்கு பெரும்  இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத் திற்கு எப்போதும் மார்க்சிஸ்ட் கட்சி பக்கபல மாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் கள் மூசா, பா.ஜான்சிராணி, ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச்செல்வம், முத்து, ஜெயசீலன், ஒன்றியச் செயலாளர்கள் வாஞ்சிநாதன், மூர்த்தி உள்ளிட்டோர் புகழ்ஞ்சலி செலுத்தினர்.