கடலார் க. வேலாயுதம் பவளவிழாவை முன்னிட்டு கடலார் 2020 நூல் வெளியீட்டு நிகழ்ச்சி திங்களன்று (ஆக.24) தலைமை செயலகத்தில் நடைபெற்றது. நூலின் முதல் பிரதியை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட டாக்டர் பிங்கி ஜோயல் இ.ஆ.ப. பெற்று கொண்டார். கடல்சார் மக்கள் நல சங்கமம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீன் குமார் பரதவர், தலைவர் இவரியஸ் பெர்ணான்டோ, இளைஞர்கள் அணி செயலாளர் ரொனால்ட் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.