சிதம்பரம் வீனஸ் குழுமம் பள்ளிகளில் நடைபெற்ற 73ஆவது சுதந்திர தின விழாவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளியின் தாளாளர் வீனஸ் குமார், முதல்வர் ரூபியாள்ராணி, காவல் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.