பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை உடனே வழங்க வேண்டும், கடன்பத்திரங்களை வெளியிட அரசின் உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் சார்பில் புதுச்சேரி தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் தங்கமணி, கொளஞ்சியப்பன், தண்டபாணி,அரிதாஸ்,தனசேகரன், ஆனந்த கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
***********************
ஊதியம் கோரி கடலூரில் பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர் திங்களன்று(பிப்.24) உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் மாவட்டச் செயலாளர் டி.குழந்தைநாதன் தலைமை வகித்தார். ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சம்மந்தம், தொலைத் தொடர்பு ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் பி.சுந்தரமூர்த்தி, அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தின் மாநில சங்க ஆலோசகர் பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.