சிதம்பரம், ஆக. 17- அண்ணாமலை பல்க லைக்கழக வேளாண் மாண வர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுய உதவிக்குழு உறுப்பி னர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேலையில்லா பட்டதாரிகள், சிறு மற்றும் குறுந்தொழில் மலர் வியபாரி களுக்கு பூங்கொத்து (பொக்கை), மலர் அலங்கா ரம் குறித்து பயிற்சி அளிக் கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற வர்களை வேளாண் மாணவ பிரதிநிதி யாழினி வரவேற்றார். பயிற்சியை பல் கலைக்கழக வேளாண் துறை இணை பேராசிரியர் ராஜ்பிரவின் துவக்கி வைத்தார். சி.முட்லூர் கிளை பாரத வங்கி மேலாளர் ரஞ்சன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலர் சாகுபடிக்குரிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து பேசி னார். அதனைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்ட கிளா டியோலஸ் மலர் கண் காட்சியை தொடங்கி வைத் தார். பின்னர் கிளாடியோ லஸ் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் சினிவாசப் பெருமாள், கணேசன் ஆகி யோர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக மலர் கொத்துகள் செய்த மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்சியில் வேளாண் உதவி பேராசிரி யர் சிவசக்தி, பள்ளி ஆசிரி யர் சாந்தி உள்ளிட்ட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.