கடலூர், ஆக. 23- கடலூரிலுள்ள செவித்திறன், பார்வைத்திறன் குறைவுடையோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதுகுறித்து அந்த பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர் அ.மரியபாஸ்கர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: கடலூர் ஆல்பேட்டையில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி யில் எல்.கே.ஜி.முதல் 8ஆம் வகுப்பு வரை சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு 3 வய திற்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். கணினி பாடம் கற்பித்துத் தரப்படும். கூடுதல் விவரங்களுக்கு 04142-221744, 94875 55948 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல் கடலூர் நெல்லிக்குப்பம் சாலை வில்வநகரில் பார்வைத்திறன் குறைவு டையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கப் படுகிறது. இங்கு 5 வயதிற்கு மேற்பட்ட வர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் விபரங்க ளுக்கு 04142-210635, 96292 47133, 97914 78337 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த பள்ளிகளில் சேருவோருக்கு கல்வி, உணவு, தங்கும் இடம், சீருடை, கல்வி உதவித்தொகை, பேருந்து பயண அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங் கப்படும். எனவே கண்பார்வை மற்றும் செவித் திறன் குறைவுடையோர் அதற்கான பள்ளி களில் தங்களது குழந்தைகளை சேர்த்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.