சிதம்பரம், பிப். 29- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத் தில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி அறி வியலில் பெண்கள் என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பரங்கிப்பேட்டை சிதம்பரம் நெய்வேலி விரு தாச்சலம் மற்றும் சீர்காழி உள்ளிட்ட பகுதி களில் இருந்து 25க்கும் மேற்பட்ட பள்ளி களில் இருந்து 350க்கும் மேற்பட்ட மாண வர்கள் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா, ஓவியம் வரைதல், சுவ ரொட்டி விளக்கக்காட்சி, வாய்வழி விளக்கக் காட்சி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர் போட்டியில் பங்கேற்ற 350 மாணவர்க ளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் முனைவர் சம்பத்குமார் பேசுகை யில், மனிதர்களின் நலன் மற்றும் மருத்து வர்களுக்கான அறிவியலின் முக்கியத்து வத்தை விளக்கினார். இந்திய பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார். அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆராய்ச்சிகளில் பெண் ஆராய்ச்சியாளர்களின் பங்கு படிப்படியாக வளர்ந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார் கடல்வாழ் உயிரியல் புல முதல்வரும் சுற்றுச்சூழல் தகவல் மைய பொறுப்பு அதி காரி சீனிவாசன் பேசுகையில், பள்ளி குழந்தை களுக்கு பல்வேறு அறிவியல் குறித்த அறிவை வழங்குவதில் பள்ளிகளின் பொறுப்பை சுட்டிக் காட்டினார். இதில் பேராசிரியர்கள் சம்பத்குமார், அனந்தராமன், ஜெயலட்சுமி, இணை பேராசிரியர்கள் ஆனந்தன், சர வணகுமார், உதவி பேராசிரியர்கள் குமரே சன், சுஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.