tamilnadu

img

ஒடிசாவில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் அதிகரிப்பு

புவனேஸ்வர்:
ஒடிசாவில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம், விடுமுறை உள்ளிட்டவை குறித்து மூத்த அரசு அதிகாரிகளுடன் முதல்வர் நவீன் பட்நாயக் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்னர் அரசு அறிவிப்பாக வெளியிடப்பட்டது. அதில், ஒடிசாவில் தற்போது மாதந் தோறும் 2-வது சனிக்கிழமை அரசு விடு முறையாக உள்ளது. தற்போது 4-வது சனிக்கிழமையும்  அரசு விடுமுறை விடுவ தற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசு அலுவலக நேரமாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உள்ளது. மதிய உணவு இடைவேளை நேரமாக 1 மணி முதல் 2 மணி வரை உள்ளது.

அதனால் ஒடிசாவில் அரசு அலு வலகங்கள் செயல்படும் நேரம் அரை மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒடிசாவில் அரசு அலுவலகங்கள் இனி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். மதிய நேர உணவு இடைவேளை நேரமாக 1.30 மணி முதல் 2 மணி வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

;