புவனேஸ்வர்:
ஒடிசா மாநில தேர்தல் பார்வையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான முகம்மது மோசின், கடந்த 17-ஆம் தேதி பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தினார். இதற்காக அவரை அவரைத் தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்தது. இதுதொடர்பாக, முகமது மோசின் தொடர்ந்த வழக்கில், அவருக்கு எதிரான நடவடிக்கைக்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் தடை விதித்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையமும் மோசின் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற்றுள்ளது.