tamilnadu

தேர்தல் அதிகாரிகளை தாக்கிய எம்எல்ஏ கைது

புவனேஸ்வர்,ஏப்.23- ஒடிசாவில் சோதனை நடத்திய தேர்தல் அதிகாரிகளை தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.பிஜு ஜனதா தள கட்சியின் சட்டமன்றஉறுப்பினர் பிரதீப் மகராதி, தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் போட்டியிடுகிறார். இவர் வாக்காளர் களுக்கு வழங்க பணம் மற்றும் மது பாட்டில்களை தனது பண்ணை வீட்டில்பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பூரி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீடு உள்ள ஹுன்கிபூர் கிராமத்துக்குச் சென்று சோதனை நடத்த முயன்றனர். உடனே பிரதீப் மகராதி எம்.எல்.ஏ. அவர்களை தடுத்ததுடன் தாக்குதல்நடத்தினார். தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பிரதீப் மகராதியை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

;