ஈரோடு, பிப். 28- திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் ஈரோடு அணி தொடர்ந்து ஆறா வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்டுதோறும் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் பள்ளி விளையாட்டு துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் திருச்சியில் நடை பெற்றது. இதில், புளியம்பட்டி கெ.ஓ.ம.அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளி ஹாக்கி அணியும், கோபி பிகேஆர் கலை அறிவியில் கல்லூரி ஹாக்கி அணியும் இணைந்து ஈரோடு அணி என்ற பெயரில் தொடர்ந்து மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் சாம்பி யன் பட்டம் வென்று வருகிது. இந்நிலையில், வெற்றி பெற்ற மாணவிகள் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.18 லட்சம் பரிசு வழங்கப்பட் டுள்ளது. மேலும், ஹாக்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மைக்காக பயிற்சியாளர் அருள்ராஜ் மற்றும் வீராங்க னைகளுக்கு புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலையாசிரியர் உமா கௌரி, ஆசிரியர்கள், மாணவிகள், விடியல் அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மற்றும் பொதுமக்கள் சார்பில் பரிசுகளும், பாராட்டுகளும் வந்தம் வண்ணம் உள்ளன.