tamilnadu

img

முன்விரோதம் காரணமாக கட்டையால் அடித்து வாலிபர் கொலை

சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவைத்தீஸ்வரன் கோயில் அருகே மருவத்தூர் பெரிய  தெருவில் வசித்துவரும் ராமச்சந்திரன் என்பவர் மகன் கட்டிட தொழிலாளியான சுகதேவ் வது 30 இவருக்கும் அதேஊரைச் சேர்ந்த உத்ராபதி மகன் ரவிச்சந்திரன், ஆனந்தன் மகன்  அரவிந்த்,  சுப்ரவேலு   மகன்கள் பாலகுரு,சிவசாமி, சிவகுரு மற்றும் சமாதானம் மகன் செல்வகுமார்  சிவகுரு மகன் பொற்செழியன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 8-6- 2020 அன்று இரவு எட்டு முப்பது மணி அளவில் மேற்கண்ட நபர்கள் முன்விரோதம் காரணமாக வாய் வார்த்தை அடிதடியாக மாறி கட்டையால் அடித்ததில்  பலத்த காயம் ஏற்பட்டுசுகதேவ் உயிருக்குப் போராடும் நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம்ராஜா முத்தையா மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டு அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர்மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் செவ்வாயன்று 16-6-2020 மதியம் 2. 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் கே.நாகையா தலைமையில் மற்றும்கட்சி உறுப்பினர்கள் திரண்டு வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட கொலையாளிகளை விரைந்து  கைது செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

;