சென்னை,ஏப்.4- கோயம்பேடு சந்தையில் தேவைக்கு அதிகமாக காய்கனிகள் வரத்து இருப்பதால் விலை குறைந்துள்ளதாக என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைவாக இருப்பதாகக் கூறி, காய்கறி விலை கடந்த வாரம் உயர்ந்தி ருந்தது. இந்நிலையில், காய்கறி வரத்து தற்போது அதிகமாக இருக்கிறது.
வழக்கமான நாட்களில் சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டன் காய்கனி கள் கோயம்பேட்டிற்கு வருவது வழக்கம். தற்போது ஊரடங்கு காரணமாக பெரு நிறுவனங்கள், மென்பொருள் நிறுவ னங்கள், (மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள்) போன்றவை மூடப்பட்டுள்ள தால் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் டன் என்ற அளவே போதுமானதாக இருப்ப தாக வியாபாரிகள் கூறுகின்றனர்.