tamilnadu

img

கதர், கைத்தறி ஆடைகளை அணிய பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தல்

சென்னை,அக்.25- பல்கலைக்கழக மற்றும் கல்லூரி நிகழ்ச்சி களில் மாணவர்கள் கதர் மற்றும் கைத்தறி ஆடை களை அணிய வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்  கழக துணைவேந்தர்களுக்கும் பல்  கலைக்கழக மானியக்குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார். அதில்,  காந்தியின் 150-வது பிறந்ததினத்தை முன்னிட்டு கதர் தொழிலை மீட்டெடுக்க அனைவரும் கதர் ஆடைகளை அணிய  வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்துள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் தங்களது சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின்போது கதர் அல்லது கைத்தறி ஆடைகள் அணிய முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. கதர் ஆடைகள் தொடர்பான விழிப்பு ணர்வை உருவாக்கி, கதர் மற்றும் கைத்தறி  தொழிலை மீட்டெடுக்க கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக்  கொள்ளப்பட்டுள்ளது.