tamilnadu

img

தியாகி ஏ.பஞ்சாட்சரம்

தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டியைச் சேர்ந்தவர் தியாகி ஏ.பஞ்சாட்சரம் (98). இவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு  அலிப்புரம் சிறையில் அடைக்கப் பட்டார். 1936 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு சுதந்திர வேட்கைக்காக தீவிர களப்பணியாற்றினார். அப் போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிலச்சுவான்தர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக காங்கிரஸ்ட் கட்சியில் இருந்து வெளி யேறினார். பின்னர் 1937 ஆம் ஆண்டு சுப்பிரமணிய சிவா வாசகர் சாலை எனும் படிப்பகத்தை நிறுவினார். மேலும் இளைஞர்களை திரட்டி ஒற்றுமை சங்கத்தை நிறுவினார்.  

இதன்பின் 1940 ஆம் ஆண்டில் தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைத்துக் கொண்டு ஒன்றுபட்ட சேலம் மாவட்டக்குழு உறுப்பினராக திறம்பட செயல்பட்டார். நாடு விடு தலைக்குப்பின் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று  சிறை சென்ற அவர், கல்வி வளர்ச்சிக் காகவும் தொடர்ந்து பாடுபட்டார். 98 வயது வரை வாழ்ந்த முதுபெரும் தோழர் தியாகி ஏ.பஞ்சாட்சரம், தனது இறுதி காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு இறுதி மூச்சு வரை மார்க் சியத்தின்  மீது அசைக்க முடியாத பற்று கொண்டிருந்தார்.  ஏகாதிபத்தியத்திற்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், இப்பகுதியில் இளைஞர்கள் மத்தியில் சுதந்திர கனலை மூட்டி னார். விடுதலைக்கு பின் முதலாளித் துவ ஆட்சியாளர்களை எதிர்த்தும், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டம் நடத்தி விவசாயிகளுக்கு நிலத்தை  மீட்டுக் கொடுத்தார். 2015 ஆம் ஆண்டு ஜூலை 22 தேதியன்று தியாகி  ஏ.பஞ்சாட்சரம் காலமானார். பஞ் சாட்சரத்திற்கு மனைவி ராஜம்மாள் (85), மகன்கள் ஸ்டாலின், மணி, குரு சேவ் மற்றும் சாந்தி, லட்சுமி என்ற மகளும் உள்ளனர்.