tamilnadu

img

உயர்மின் கோபுரம்: எதிர்க் கட்சிகள் மீது பழிபோடும் அமைச்சர்

சென்னை,ஜூலை 20- உயர்மின் கோபுரம் அமைப்பது தொடர்பான பிரச்சனை குறித்து தமி ழக சட்டப்பேரவையில் மின்துறை  அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார். அப்போது, “தமிழ்நாட் டின் மக்கள் நலன்களுக்கு தான்  மின்சாரத்தை பல்வேறு இடங்க ளுக்கு கொண்டு செல்ல உயர்மின்  கோபுரங்கள் அமைக்கப்படு கின்றன. வெளி மாநிலத்திலிருந்து மின்சாரம் கொண்டு வருவதற்கு உயர்மின் கோபுரங்கள் பயன்படு கின்றன. ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாதபடி எதிர்க் கட்சியை சேர்ந்த  சில எம்.பி.க்கள் விவசாயிகளை தூண்டுகிறார்கள். இதை சுமூகமாக தீர்க்க எதிர்கட்சித்  தலைவரும் உதவ வேண்டும்” என்றார். அப்போது குறுக்கிட்ட ஸ்டா லின், “இதுபற்றி எங்களிடம் பேசு வதை விட பாதிக்கப்பட்ட மக்களை யும் விவசாயிகளையும் அழைத்து சுமூகமாக பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்  சர், “நாங்கள் பேச்சு நடத்தினாலும் சில எம்.பி.க்கள் தடையாக இருக்கி றார்கள் என்றார்.

அப்போது, பின்வரி சையில் இருந்த திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜி ஒரு கருத்தை தெரிவித்ததால் ஆவேசமடைந்த அமைச்சர் தங்கமணி, அதை கேட்க  இவர் யார்? என ஒருமையில் பேசிய தால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம்  நிலவியது. மீண்டும் குறுக்கிட்ட ஸ்டா லின், “எங்கள் கட்சி எம்பிக்கள் விவ சாயிகளை தூண்டி விடுகிறார்கள் என மின்துறை அமைச்சர், சொல் வதை மறுப்பதற்காகத் தான் செந்  தில்பாலாஜி எழுந்தார். அவரது செயல் தவறு என்றால் நான் மன்  னிப்பு கேட்கிறேன். ஆனால், எம்.பி.க்கள் குறித்து அமைச்சர் பேசி யதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தி னார். அப்போது குறுக்கிட்ட முதல மைச்சர்,“ மின் கோபுரம் அமைக்கும்  விவகாரத்தில் சுமூகமாக விவசாயி களுடன் பேச்சு நடக்கும் போது பீதியை கிளப்பும் வகையில் சிலர்  நடந்து கொள்வதைத்தான் அமைச் சர் சுட்டிக் காட்டினார். இதில் சுமூக  தீர்வு ஏற்பட அனைவரும் ஒத்து ழைக்க வேண்டும்” என்றார். மீண்டும் பேசிய அமைச்சர், “சத்தீஸ்கரிலிருந்து மின்சாரம் கொண்டு வர ஒப்பந்தம் போடப்  பட்டுள்ளது. மின் கோபுரம் அமைப் பதை தடுத்தால் நமக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எம்.பி.க்கள் பற்றி நான் குறிப்பிட்டு சொன்ன வார்த்தையை அவை குறிப்பிலிருந்து நீக்கலாம்.  தமிழக  மக்கள் நலன் கருதி மின் கோபு ரங்கள் அமைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.