tamilnadu

img

வனத்துறை அலுவலகத்திற்கு மழைபெய்தால் பாதை இல்லை

கடமலைக்குண்டு:
தேனி மாவட்டம் கண்டமனூரில் வனத் துறை அலுவலகம் அமைந்துள்ளது. வனத்துறை அலுவல நுழைவாயில் அருகே ஓடைசெல்கிறது. இந்த ஓடையைத் தாண்டி வனத்துறை அலுவலகத்திற்கு செல்வதற்கு பாலம் அமைக்கவில்லை. மழை பெய்து ஓடையில் நீர் வரத்து ஏற்படும் நாட்களில் வனத்துறை அலுவலகத்திற்கு செல்ல முடியாது. அது போன்ற நாட்களில் வனத்துறையினர் மாற்றுப் பாதை வழியாக அலுவலகத்திற்கு நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
கடந்த இரண்டு மாதங்களாக கண்டமனூர் பகுதியில் மழை பெய்து ஓடையில் அவ்வப்போது நீர்வரத்து ஏற்படுகிறது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு வனத்துறை அலுவலக நுழைவாயில் முன்பு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கண்டமனூர் வனச்சரக அலுவலகத்திற்கு வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் ஓடையின் குறுக்கே புதிய பாலம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;