tamilnadu

img

தமுஎகச மூத்த தலைவர் ப.ரத்தினம் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

மதுரை, அக்.15-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் ப.ரத்தினம் (வயது 90) அவர்கள் அக்டோபர் 14 திங்களன்று மதுரையில் காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. அன்னாரது உடலுக்கு தலைவர்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் நாளிதழ் ஆசிரியருமான மதுக்கூர் ராமலிங்கம், தமுஎகச மாநில சிறப்புத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், மாநில துணைத்தலைவர் என்.நன்மாறன், கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி. ராமகிருஷ்ணன், தமுஎகச மாவட்டச் செயலாளர் அ.ந.சாந்தாராம், புறநகர் மாவட்ச் செயலாளர் வெண்புறா சரவணன், முன்னாள் மாவட்டத் தலைவர் ந.ஸ்ரீதர், மூத்த எழுத்தாளர் தி.வரதராசன், செம்மலர் துணை ஆசிரியர் சோழ. நாகராஜன்,  சிஐடியு மாவட்ட தலைவர் மா.கணேசன், செயலாளர் இரா.தெய்வராஜ், பொருளாளர் இரா.லெனின், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், கட்சியின் புதூர் -அண்ணா நகர் பகுதி செயலாளர் டி.குமரவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், ஜா.நரசிம்மன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி.கோபிநாத்,  செயலாளர் டி.செல்வா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வேல்தேவா மற்றும் தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  

கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

தோழர் ரத்தினம் மறைவுச் செய்தி அறிந்து துயரம் தெரிவித்துள்ள சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அவரது மறைவுக்கு கட்சியின் மாநில செயற்குழு இதயப்பூர்வமான இரங்கல்களை தெரிவிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.