தண்ணீர் சிக்கனம்பற்றி
கவிதை எழுதச்
சொன்னார்கள்.
வரிகளில் சிக்கனம்
அவசியமாம்!
கடவுளை இரைஞ்சுங்கள்!
பால், பன்னீர் காவடி எதற்கு?
தண்ணீர் காவடி தூக்குங்கள்!
பூக்குழி வேண்டாம்!
நீர்க்குழி இறங்குங்கள்!
காசு கொடுத்து
தண்ணீர் வாங்கி
அண்டாக்களில் நிரப்பி
பதினொரு வேதவிற்பனர்களை
தட்சணை கொடுத்து
அதனுள் அமர்த்தி
வருண மந்திரம்
யாசிக்கச் சொல்லுங்கள்!
வேறு!
வேறு!
வேறு!
தூரமாய் நின்று
108 விவசாயிகளை
பட்டினியாய்
வணங்கிடச்செய்யுங்கள்!
த்தூ!
சிக்கனம் அவசியம்!
உமிழ் நீர்!