சென்னை, மார்ச் 4- சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள திமுக பொதுச் செயலாளர் க.அன்பழக னின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உறவினர்கள் கண்காணித்து வந்தனர். கடந்த 24- ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அன்பழகனுக்கு வெண்டிலேட்டர் உதவி யுடன் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. தி.மு.க.வின் மூத்த தலைவ ரான அன்பழகனை மருத்து வர்கள் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மருத்துவ மனைக்கு சென்று அவரது உடல் நலம் குறித்து விசா ரித்து வருகிறார். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. உயிருக்கு ஆபத் தான நிலையில்தான் அவர் சிகிச்சை பெற்று வரு கிறார் என்றும் வயது முதிர்வு காரணமாக ஏற்படக் கூடிய பிரச்சனைதான் அன்பழகனுக்கு ஏற்பட் டுள்ளது என்றும் மருத்து வர்கள் தெரிவித்தனர். மருத் துவர்கள் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர்.